தமிழகத்தில் மே 1 முதல் முழு ஊரடங்கு, பள்ளிகள் மூடல்? சுகாதாரத்துறை விளக்கம்!

0
தமிழகத்தில் மே 1 முதல் முழு ஊரடங்கு, பள்ளிகள் மூடல்? சுகாதாரத்துறை விளக்கம்!
தமிழகத்தில் மே 1 முதல் முழு ஊரடங்கு, பள்ளிகள் மூடல்? சுகாதாரத்துறை விளக்கம்!
தமிழகத்தில் மே 1 முதல் முழு ஊரடங்கு, பள்ளிகள் மூடல்? சுகாதாரத்துறை விளக்கம்!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மே 1 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊரடங்கு:

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு ஆளாகி பல லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாயினர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசும் பல விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும், பொது இடங்களில் செல்லும் போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Exams Daily Mobile App Download

மேலும், இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொண்டதால் தான் கொரோனா பரவல் தமிழகத்தில் குறைய ஆரம்பித்தது. இதனால் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தவர்களை செலுத்திக்கொள்ளும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமே இதுவரை 91.1% பொதுமக்கள் முதல் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளனர் மற்றும் 74.75% பொதுமக்கள் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். தடுப்பூசி செலுத்தி கொண்டதன் காரணமாக கொரோனா மூன்றாம் அலை மிக பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கொரோனா பரவல் இல்லாமல் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் மக்கள் சுதந்திரமாக பொது இடங்களில் நடமாட துவங்கினர்.

TNPSC தேர்வுக்கான Hall Ticket வெளியீடு – முழு விவரங்கள் இதோ..!

இந்நிலையில், டெல்லி , ஹரியானா, உத்திரபிரதேசம் முதலான மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்த மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு நடைமுறைகளை அமல்படுத்துவது தொடர்பாக சமீபத்தில் முதல்வர் முன்னிலையில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது மற்றும் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வர்களுடனும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், மே 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு எனவும், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் மூடப்போவதாகவும் வதந்திகள் பரவி கொண்டிருக்கிறது. இதனால், இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!