தமிழகத்தில் முழு ஊரடங்கு மேலும் சில வாரங்கள் நீட்டிப்பு? அரசுக்கு வலியுறுத்தல்!
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள முழு ஊரடங்கு உத்தரவானது ஜூன் 14 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், இந்த கட்டுப்பாடுகள் மேலும் சில வாரங்கள் நீட்டிக்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
முழு ஊரடங்கு நீட்டிப்பு:
மாநிலம் முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தடுப்பு நடவடிக்கைகளாக ஜூன் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கமாக, முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் ஜூன் 14 ஆம் தேதிக்கு பிறகு இந்த கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும் என அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, ‘தமிழகத்தில் செயலில் உள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்த உயர் நீதிமன்றத்தின் விமர்சனம் வரவேற்கத்தக்கது.
தமிழகத்தில் 50% இருக்கைகளுடன் பேருந்துகள் செயல்பட அனுமதி? புதிய தளர்வுகள் அறிவிக்க வாய்ப்பு!!
இவை தமிழ்நாட்டு மக்கள் மீதான அக்கறையின் வெளிப்பாடாகும். தமிழகத்தில் மே 7 முதல் உள்ள ஊரடங்கு நடைமுறையில், கட்டுப்பாடுகள் சரியாக பின்பற்றடுகிறதா என்பதில் சந்தேகங்கள் எழுந்துள்ளது. சென்னை துவங்கி, கன்னியாகுமரி வரை பொது மக்கள் சாலைகளில் வாகனங்கள் வழியாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல் அமலில் உள்ள பொது முடக்கத்தில் ஒரு நாள் கூட முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படவில்லை.
அதிலும் முக்கியமாக சாலைகளில் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டு வருகிறது. இதில் யாருக்கு ஊரடங்கு என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவசர காரணங்களுக்காக மாவட்டங்கள் தோறும் பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டவுடன், 60 லட்சம் பேர் இ – பதிவில் விண்ணப்பித்ததால் அந்த வலைதளமே முடங்கி விட்டது. இதிலிருந்து தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் எவ்விதம் கடைபிடிக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது.
TN Job “FB Group” Join Now
டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகள் மூலமாக தான் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த அளவுக்கு தமிழகத்திலும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவேண்டும். இது தவிர தமிழகத்திலும் 70% க்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தினால் தான் கொரோனாவிலிருந்து நாம் தப்பிக்க முடியும். எனவே தமிழகத்திலும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து அவற்றை முறையாக செயல்படுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
It’s TRUE complete lockdown any one didnt open covid completed in tamilnadu