தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. அத்துடன் தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் பிஏ 4 வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமோ என்று பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
முழு ஊரடங்கு:
தமிழகத்தில் இதுவரை கொரோனாவின் மூன்று அலையின் தாக்கத்தை கண்டுள்ளது. இதில் கொரோனாவின் 2ம் அலையின் தாக்கம் தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் வைரஸ் தொற்றின் காரணமாக கொரோனாவின் 3ம் அலையின் தாக்கம் தொடங்கியது. அத்துடன் நாடு முழுவதும் கொரோனாவின் 3ம் அலை வேகமெடுக்க தொடங்கியது. அதனால் மீண்டும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி கடந்த பிப்ரவரி மாதத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கியது.
Exams Daily Mobile App Download
அதன்படி அமல்படுத்தப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் கடந்த மார்ச் மாதம் திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. இதனை தொடர்ந்து தற்போது அனைத்து தொழிற்துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. ஆனால் பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் இருக்க கூடாது என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. அதன்படி தற்போது பொது இடங்களில் முகக்கவசமின்றி இருப்பவர்களுக்கு ரூ.500 வரை அபராதமாக வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருவருக்கு ஒமைக்ரானின் பிஏ 4 வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆதார் கார்டில் பெயர் திருத்தம், சேர்க்கை செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
மேலும் இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு குறித்து பொதுமக்கள் யாரும் பயப்பட தேவையில்லை என்றும் இந்த வகை கொரோனா பாதிப்பால் குறைந்த அளவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் பிஏ 2 வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நாடுகளில் தான் பிஏ 4 மற்றும் பிஏ 5 வகை கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதனால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சமயத்தில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது தொடர்பாக அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.