தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எச்சரிக்கை!
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் ஒரு சில மாதங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று கூறி தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
முழு ஊரடங்கு:
உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவல் கடந்த இரு ஆண்டுகளாக தலைதூக்கி இருந்தது. அதன் பின்னர் கடந்த வருடம் ஜனவரி மாதம் கொரோனாவின் மூன்றாம் அலை குறைய ஆரம்பித்த காரணத்தினால் அனைத்து நாடுகளும் ஓரளவு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், கொரோனா தினசரி பாதிப்பும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. மேலும் இந்த ஆண்டு கட்டாயமாக பொதுத் தேர்வுகள்
நடைபெறும் என்றும் கூறியுள்ளனர்.
4 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல் – அரசு அதிரடி நடவடிக்கை!
இந்நிலையில் ஐரோப்பிய நாடான பிரிட்டனில், ஒமைக்ரான் தொற்றின் திரிபான XE வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இது அதி வேகமாக பரவக் கூடியது என்றும் கூறியுள்ளனர். மேலும், மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் வதோதராவுக்கு வந்த முதியவர் ஒருவருக்கு இந்த புது வகை வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் இது குறித்த செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவி வந்தது. ஆனால் தமிழக அரசு சார்பில் இந்த செய்தி தவறானது என்றும் கூறிவிட்டனர்.
நாட்டில் மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி அறிவிப்பு!
இந்த நிலையில் கோவை மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், ஹீமோபிலியா எனப்படும் ரத்தம் உறையா நோய் நாள் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அங்கு அவர் கூறியதாவது, தமிழகத்தில் பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்ட காரணத்தால் 82 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. மேலும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, கைகளை கழுவுவது ஆகிய விதிமுறைகளை இன்னும் ஒரு சில மாதங்களுக்கு அனுசரித்து தான் ஆக வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்து உள்ளார்.