தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்!

0
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்!
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்!

இந்தியாவில் கடந்த சில நாள்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, முன்னேச்சரிக்கை நடவடிக்கைள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் முழு ஊரடங்கு அமல்:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்ததால் கொரோனா முடிந்து விட்டதாக கருதப்பட்டது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டன. ஆனால் தமிழகத்தில் கொரோனா தொற்று இரட்டை இலக்கங்களில் குறைந்து கொண்டே வந்தது. தற்போது மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் தினசரி தொற்று எண்ணிக்கை சிறிது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும் கட்டுப்பாடுகள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி நாளை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

Exams Daily Mobile App Download

தமிழகத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க முதல்வர் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், பேசிய முதல்வர் வடமாநிலங்களிலும் சென்னை ஐஐடியிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஒரு வாரத்தில் தொற்று அதிகரித்துள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி போடாதவர்களின் எண்ணிக்கை 1.48 கோடி பேராகும். பூஸ்டர் டோஸ் போட தகுதியிருந்தும் 11.06 லட்சம் பேர் போடவில்லை. கொரோனா பரவலை தடுக்க நம்மிடம் இருக்கும் ஆயுதம் கொரோனா தடுப்பூசி. தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட வேண்டும். அது போல் மக்கள் பொது இடங்களில் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும். கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த நிலையில், இது தொடர்பாக மருத்துவத்துறை செயலாளர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் அலட்சியம் காட்டாமல் தமிழக அரசின் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். கொரோனா பரவல் எழுச்சியை குறைக்க மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். மேலும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என உறுதி அளித்தார். சென்னை ஐஐடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!