தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? முதல்வர் நடத்தும் முக்கிய ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் தற்போது குறைய தொடங்கியுள்ளது. இப்போது அண்டை மாநிலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக முதல்வர் உயர் அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் தென்னாப்பிரிக்காவில் உருவான புதிய வகை கொரோனாவான “ஓமைக்ரான்” வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. அதன் விளைவாக தமிழகத்தில் கொரோனாவின் 3ம் அலையின் தாக்கம் தொடங்கியதை உணர முடிந்தது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை ஜனவரி மாதம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டது. அத்துடன் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.
ExamsDaily Mobile App Download
இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் கொரோனா பரவல் குறைய தொடங்கியது. அதனால் தமிழகத்தில் அமலில் இருந்த கட்டுப்பாடுகளுக்கு படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளன. அத்துடன் அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. ஆனால் இப்போது ஓமைக்ரான் வைரஸின் திரிபான எக்ஸ்இ தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவிலும் கால் பாதித்துள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
தேர்வில்லாமல் ரூ.54,880 ஊதியத்தில் ECIL நிறுவனத்தில் வேலை..!
அதன்படி கொரோனா வழிகாட்டுதல் நடவடிக்கையான முகக்கவசம் அணிதல், கை கழுவுதல், தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்டவை பொதுமக்கள் கட்டாயமான முறையில் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அதனால் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் உயர் அதிகாரி மற்றும் மருத்துவ குழு உறுப்பினர்களுடன் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.