தமிழகத்தில் மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தினால் ஊரடங்கு கூடிய விரைவில் ஊரடங்கு அமல்படுத்த இருப்பதாகவும், பேருந்துகள் ஓடாது எனவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் தற்போது சுகாதாரத்துறை செயலாளர் அதற்கு தகுந்த விளக்கமளித்துள்ளார்.
ஊரடங்கு:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்து வருகிறது. ஓய்வே இல்லாமல் கொரோனா வந்தபடியே இருக்கிறது. கொரோனா தொற்றுக்கு ஆளாகி பல லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாயினர். கொரோனாவை கட்டுப்படுத்த அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதாவது, இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு மக்களை பொது இடங்களில் நடமாட விடாமல் எச்சரித்தனர். அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் எனவும், அப்படி பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
Exams Daily Mobile App Downloadc
இதற்கு பிறகு தமிழகத்தில் ஓரளவுக்கு கொரோனா தொற்று குறைய ஆரம்பித்தது. கொரோனா பரவல் குறைந்ததுமே மக்கள் பழையபடி பொது இடங்களில் நடமாட துவங்கினர். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கொரோனா தொற்று இல்லாமல் மக்கள் நிம்மதியாக இருந்தனர். ஆனால், தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவ ஆரம்பித்துள்ளதால் ஊரடங்கு அமல்படுத்துவது மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக கடந்த வாரம் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இரவு நேரத்தில் ரயில் பயணம் செய்யும் பயணிகளின் கவனத்திற்கு – புதிய மாற்றங்கள்!
இந்நிலையில், தமிழகத்தில் விரைவில் முழு ஊரடங்கு அமல்படுத்த இருப்பதாகவும், பேருந்துகள் இயங்காது எனவும் வதந்திகள் பரவி கொண்டிருக்கிறது. யாரும் இது போன்ற வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என சுகாதாரத்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வரின் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் வரை யாரும் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.