ஜூன் 21க்கு பின் இரவு, வார இறுதி முழு ஊரடங்கு அமல்? வெளியான தகவல்கள்!
கர்நாடகா மாநிலம், பெங்களூரு நகரத்தில் ஜூன் 21 க்கு மேல் அறிவிக்கப்படவுள்ள முழு ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுக்கப்படவுள்ளது. அந்த வகையில் 50% இருக்கைகளுடன் பொது போக்குவரத்து மீண்டுமாக துவங்க அனுமதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பேருந்து சேவைகள் துவக்கம்:
கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்து வரும் நிலையில் கர்நாடகாவில் ஜூன் 21 ஆம் தேதி முதல் அடுத்த ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படவுள்ளது. அதன் படி அம்மாநிலத்தில் 50 சதவீத இருக்கை வசதிகளுடன் பேருந்து பொது போக்குவரத்து மீண்டுமாக செயல்பட அனுமதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், பெங்களூரு நகரத்தில் இரவு, வார இறுதி ஊரடங்கு உத்தரவு தொடரும் எனவும், இது குறித்த இறுதி முடிவை அரசு எடுக்கும் என பெங்களூரு மகாநகர தலைமை ஆணையர் கவுரவ் குப்தா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தடுப்பூசி செலுத்தினால் ரொக்கப்பரிசு – அரசு அறிவிப்பு!
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘பெங்களூரில் கொரோனா தொற்றின் பரவல் குறைந்து வருவதால் பல வணிக நடவடிக்கைகள் மற்றும் சேவைகளை மீண்டுமாக திறப்பது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சில தடைகளுடன் பொது போக்குவரத்து மீண்டும் துவங்க வாய்ப்புள்ளது. மாநிலம் முழுவதுமான இரவு நேர ஊரடங்கு உத்தரவு தொடரும் எனவும் இந்த காலத்தில் மருத்துவம் உள்ளிட்ட சில நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்’ என கூறியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
இது தவிர கொரோனா இரண்டாம் அலையின் போது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும், 3 ஆம் அலையின் போது மேலும் தீவிரமாக செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது கொரோனா பராமரிப்பு மையங்கள், தடுப்பூசி இயக்கம் மற்றும் ஆக்ஸிஜன் வசதிகளை வழங்குவது போன்றவைகளை அதிகரிக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் கர்நாடகா மருத்துவமனைகளில் கூடுதல் தீவிர சிகிச்சை பிரிவுகளை (ICU) அமைப்பதற்காக கார்ப்பரேட் நிறுவனங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.