இந்தியாவில் ஜூன் மாதம் முழு ஊரடங்கு அமல்? கொரோனா நான்காம் அலை எதிரொலி!
இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் நான்காவது கொரோனா அலை பரவல் குறித்த அச்சம் எழுந்துள்ளது. இதனால் தடுப்பு பணியாக ஊரடங்கு விதிக்கப்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஊரடங்கு:
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பரவத் தொடங்கிய கொரோனா இரண்டாம் அலையால் நாடு முழுவதும் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். மேலும் பலர் கடுமையான நோய் தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். மேலும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரித்தது. இரண்டாம் அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்தது. இதனையடுத்து அனைத்து மாநிலங்களும் நோய் பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. மேலும் தடுப்புப் பணிகளை துரிதப்படுத்த உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியது.
தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் – செவி சாய்ப்பாரா முதல்வர்?
இதன் பேரில் முழு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் தடுப்பு பணியின் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெறத் தொடங்கியது. இதன் விளைவாக படிப்படியாக பாதிப்புகள் குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கை நோக்கி திரும்பிய நிலையில் பொது மக்களின் நலன் கருதியும், தொழில் சரிவை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா நான்காம் அலை பரவி வருகிறது.
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தற்போது ஒமைக்ரான் எக்ஸ் இ மற்றும் பி ஏ.2 வகை தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் கொரோனா நான்காம் அலை பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்கள், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் மாதம் நான்காவது அலை ஏற்படும் என்ற ஐஐடி ஆய்வு தகவல் கூறுகிறது. இதனால் மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்படும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.