இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு எடுக்கபோகும் முடிவு என்ன?
இந்தியாவில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் திரும்ப பெற்றது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து கொண்டு வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
முழு ஊரடங்கு
இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் இந்தியாவில் கொரோனா பேரலையின் 4ம் அலை ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி தற்போது பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
Exams Daily Mobile App Download
இதில் தலைநகர் டெல்லி, தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் தலைநகர் டெல்லி, தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் இன்று 2,841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசில் ஆண்களுக்கான வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
இந்தியா முழுவதும் 18,604 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. மேலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. அத்துடன் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.