இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? ஏப்ரல் 27 இல் பிரதமர் எடுக்கப்போகும் முடிவு!
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் கடந்த ஜனவரி மாத இறுதியில் குறையத் தொடங்கியது. தற்போது தலைநகர் டெல்லி, தமிழகம், உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதனால் வருகிற 27ம் தேதி அன்று ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
முழு ஊரடங்கு
இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரசான ஓமைக்ரான் தொற்று காரணமாக வேகமெடுக்க தொடங்கியது. அதனால் தேவைப்பட்டால் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்தது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அத்துடன் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது.
சஞ்சீவ்வின் பழைய புகைப்படங்களை பார்த்து வியப்பில் ஆலியா – வைரலாகும் வீடியோ!
அதன்படி கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் குறையத் தொடங்கியது. அதனால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதேபோல் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டது. இப்போது ஓமைக்ரானின் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனாவான எக்ஸ்இ தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அத்துடன் இந்தியாவிலும் எக்ஸ்இ தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் தலைநகர் டெல்லி, தமிழகம், உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதனால் டெல்லி, தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் முகக்கவசம் அணியாவிடில் அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வருகிற 27ம் தேதி அன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக்குவது, தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.