இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? இன்று பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனை!
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அனைத்து மாநிலங்களும் பெரும் அச்சத்தில் உள்ளன. மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழக்க நேரிடுமோ என்ற கவலையில் பொதுமக்கள் உள்ளனர். இந்த நிலையில் இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகிறார்.
முழு ஊரடங்கு அமல்:
இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம், கடந்த ஜனவரி மாத இறுதியில் குறையத் தொடங்கியது. இதன் காரணமாக, பிப்ரவரி மாதம் முதல் ஊரடங்கில் மாநில அரசுகள் தளர்வுகள் அளித்தன. இதற்கிடையில் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் வைரஸ் பாதிப்பு திணறடித்து வருகிறது. அந்த நாட்டின் வர்த்தக தலைநகர் என்கிற சிறப்புக்குரிய ஷாங்காய் நகரில் கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கடந்த சில தினங்களாக தலைநகர் பீஜிங்கிலும் தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது. இதனால் ஷாங்காய் நகரை போல பீஜிங்கிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என அச்சம் நிலவுகிறது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் பீஜிங்கில் நேற்று புதிதாக 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பீஜிங்கில் உள்ள ஒரு பகுதி கொரோனாவுக்கான அதிக ஆபத்துள்ள பகுதியாகவும், மற்ற 7 பகுதிகள் நடுத்தர ஆபத்து பகுதிகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லி, தமிழகம், உத்தர பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிப்பது போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
TN TRB தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – TET பாடத்திட்டத்தை டவுன்லோட் செய்வது எப்படி?
மேலும், டெல்லி, தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில், முக கவசம் அணியவில்லை என்றால், அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டம், வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது, தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்துவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படக் கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இந்தியாவில் முழு ஊரடங்கு அமலாகுமா, என்ற தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.