நாடு முழுவதும் ஏப்ரல் 30 வரை முழு ஊரடங்கு அமல்? 1 கோடி பேருக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு!
நெதர்லாந்து நாட்டின் குளிர் காலத்தில் சுமார் 1 கோடி பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஊரடங்கு:
உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியது. இந்த வைரஸ் முதன் முதலில் சீனாவில் இருந்து பரவியது. சீனாவை தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் விரைவாக பரவியது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாட்டு அரசுகளும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றவும், கிருமி நாசினிகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது.
ExamsDaily Mobile App Download
உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி செலுத்தும் பணியில் முழு வீச்சில் செயல்பட்டனர். இதன் காரணமாக கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வந்தது. அதனால் அரசும் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. சீனா, ஆஸ்திரியா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில், தற்போது, கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது.
திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – தேவஸ்தானத்தின் சூப்பரான அறிவிப்பு!
மற்ற நாடுகளை தொடர்ந்து நெதர்லாந்திலும் பாதிப்புகள் அதிகரித்து வரும் வேளையில் குளிர் காலத்தில், நாட்டில் 1 கோடி பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். குளிர்காலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.