ஜூலை 10 வரை 8 உள்ளாட்சி அமைப்புகளில் முழு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!
திரிபுரா மாநிலத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், முழு ஊரடங்கு உத்தரவை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அத்தியாவசிய கடைகளுக்கு நேர கட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா 2 ஆம் அலை காரணமாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிப்பதாக திரிபுரா மாநில அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் திரிபுரா அரசு வெளியிட்ட புதிய உத்தரவின் படி, அகர்தலா முனிசிபல் கார்ப்பரேஷன் உட்பட 10 குடிமை அமைப்புகளுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (ஜூலை 3) முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூலை 3 ஆம் தேதி காலை 6 மணி முதல் ஜூலை 10 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதாரில் மொபைல் எண்ணை அப்டேட் செய்ய எளிய வழிமுறைகள் – ஆன்லைன் & ஆஃப்லைன்!
அந்த வகையில் திரிபுரா மாநிலத்தில் AMC, ராணிர்பஜர் நகராட்சி மன்றம், ஜிரானியா நகர் பஞ்சாயத்து, உதய்பூர், கைலாஷாஹர் நகராட்சி மன்றம், பானிசாகர் நகர் பஞ்சாயத்து, கோவாய், தர்மநகர் நகராட்சி மன்றம் மற்றும் பெலோனியா நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் ஜூலை 10 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். அதே நேரத்தில் குமர்கட் நகராட்சி மன்றம், கமல்பூர் நகர் பஞ்சாயத்து மற்றும் சோனாமுரா நகர் பஞ்சாயத்து பகுதிகளில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
தவிர கொரோனா தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு அனைத்து பயிற்சி மையங்களையும் திறக்க நிர்வாகம் அனுமதித்துள்ளது. மேலும் தினசரி காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஊரடங்கு உத்தரவு உள்ள பகுதிகளில் கடைகள் மற்றும் சந்தைகள் திறந்திருக்கும். இருப்பினும் ஜிம்கள், வணிக வளாகங்கள், சினிமா அரங்குகள், நீச்சல் குளங்கள், அழகு நிலையங்கள் மற்றும் பொது பூங்காக்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். இதற்கிடையில், திரிபுரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 409 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆதார் கார்டில் மொபைல் நம்பர் மாற்றுவது எப்படி