வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசு அதிரடி நடவடிக்கை!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தலைநகரான லாகூரில் தற்போது மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்துள்ளதாக ஐஏஎன்எஸ் தெரிவித்துள்ளது.
முழு ஊரடங்கு:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண அரசாங்கம் ஆற்றலைப் பாதுகாக்கும் விதமாக மின் தடைகளைக் குறைப்பதற்கு அனைத்து வகையான வணிக நடவடிக்கைகளுக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், பாகிஸ்தான் மாகாண தலைநகரான லாகூரில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழுமையான பூட்டுதலை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் சந்தை நேரங்களை இரவு 10 மணி வரை கட்டுப்படுத்துதல், வாரத்தின் வேலை நாட்களை 5 நாட்களாக மாற்றியமைத்தல் ஆகியவை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் வெள்ளிக்கிழமைகள் தோறும் அலுவலக ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் நாளாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது லாகூரில் அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகள் தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வணிக நடவடிக்கைகளும் நிறுத்தப்பட இருக்கிறது. அந்த வகையில் அனைத்து வணிகச் சந்தைகள், பிளாசாக்கள், மொத்த மற்றும் சில்லறை வணிகம், வணிக வளாகங்கள், பேக்கரிகள், மிட்டாய் கடைகள், அலுவலகங்கள், ஸ்டோர் ரூம்கள், குடோன்கள், கிடங்குகள் உள்ளிட்ட அனைத்து வணிகச் சந்தைகளுக்கும் மூடப்பட்டிருக்கும்.
எவ்வாறாயினும் இந்த முடிவு வணிக சமூகதினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும் அறிவிக்கப்பட்ட நேரத்தில் நகரின் அனைத்து வணிக நடவடிக்கைகளும் மூடப்படுவதை உறுதி செய்வதற்காக லாகூர் பெருநகர மாநகராட்சி மற்றும் பிற ஏஜென்சிகள் அடங்கிய சிறப்புக் குழுக்களை மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ளது. இதற்கிடையில் தற்போது வரை ஒரு நாளைக்கு சுமார் 12 முதல் 16 மணிநேரம் வரை நீட்டிக்கப்பட்ட மின்வெட்டுகளால் லாகூர் நகர மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.