தமிழகத்தில் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல் – கடைகளில் குவியும் மக்கள் கூட்டம்!
தமிழகத்தில் ஜூன் 7 முதல் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் காய்கறி, மளிகை கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் பொருட்களை வாங்க மக்கள் கடைகளில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. வைரஸ் தாக்கம் அதிகரிப்பால் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தொடர் மரணங்களும் அரங்கேறியது. இந்த வைரஸ் பரவலை தடுக்க அரசு கொரோனா தடுப்பு குழுக்களை அமைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சுகாதாரத்துறை ஊரடங்கை அமல்படுத்த அரசுக்கு அறிவுறுத்தி வருகிறது. இதன்படி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை அறிவித்தார். மே 10 முதல் 24ம் தேதி வரை 14 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இரவு 7 மணி வரை கடைகளை திறக்க அனுமதி – ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு!
ஆனால் ஊரடங்கை பொருட்படுத்தாமல் சாலைகளில் சுற்றி திரிந்தனர். நோய் பரவலும் குறையவில்லை. அதனால் ஊரடங்கானது மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டது. ஜூன் 7 வரை தளர்வில்லா முழு முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதன்படி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வாகனங்களில் காய்கறி, மளிகை பொருட்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும் தொலைபேசி மூலமும் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த முழு தளர்வில்லா ஊரடங்கின் காரணமாக கொரோனா தொற்று சற்று குறைய தொடங்கியது. இதன் காரணமாக ஜூன் 7 முதல் தமிழகம் முழுவதும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காய்கறி, மளிகை கடைகள் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள் விற்கப்படும் கடைகள் திறக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைகளில் குவிந்தனர்.