தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அரசு விளக்கம்!
தமிழகத்தில் தற்போது கொரோனா புதிய பாதிப்புகள் அதிகரித்து வரும் வேளையில், மீண்டும் முழு ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு அரசு தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு:
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பெருந்தொற்று விகிதம் கணிசமாக உயர்வடையத் துவங்கி இருக்கிறது. குறிப்பாக, ஒரு சில நாட்களாக இந்தியாவில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்து வருகிறது. மஹாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் இந்த நோய்த்தொற்றின் தாக்கம் அதிகளவு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல தமிழகத்திலும் கூட புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை மூன்று இலக்கங்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னை ஐஐடியில் மட்டும் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது
Exams Daily Mobile App Download
இதனை கவனத்தில் கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, பொது இடங்களில் மக்கள் முகக்கவசங்களை அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று மக்களை அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் முகக்கவசங்களை அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அதிகரித்து வரும் நோய்த்தொற்று விகிதம் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க தூண்டுமோ என்று மக்கள் மத்தியில் பெரிய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.
தமிழக தொலைதூரக் கல்வி கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு!
இந்த நிலையில் சென்னையில் இன்று (ஏப்ரல்.29) செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், ‘தமிழகத்தின் 27 மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகவில்லை. மற்றபடி, 9 மாவட்டங்களில் கொரோனா பரவல் ஆங்காங்கு இருக்கிறது. மாநிலம் முழுவதும் சுமார் 1.48 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. அதனால் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும். இப்போது வரை தமிழகத்தில் 1,000 பேரில் 3 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசங்களை அணிந்து கொண்டு சமூக இடைவேயை பேண வேண்டும். மேலும், தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர். தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்துவதற்கும், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை. இருப்பினும் தேவையான நடவடிக்கைகள் அரசு தரப்பில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என குறிப்பிட்டுள்ளார்.