தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா பரவல் சூழலுக்கு மத்தியில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் பிப்ரவரி மாதத்திற்கு பிற்பாடு குறைந்து வந்த கொரோனா பரவல் பாதிப்புகள் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா புதிய பாதிப்புகள் 100க்கும் மேல் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் அனைவரும் மீண்டுமாக முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் முக ஸ்டாலின் முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Exams Daily Mobile App Download
இதற்கு முன்னதாக சமீபத்தில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை உட்பட மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் பொது மக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று எச்சரிப்பு விடுத்துள்ளார். இதற்கிடையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 552 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – 14 % அகவிலைப்படி உயர்வு!
இந்த எண்ணிக்கை இதற்கு மேல் உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து விரைவில் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது. மேலும் இந்த கூட்டத்தின் போது முதற்கட்டமாக கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.