இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? பிரதமர் மோடி விளக்கம்!

0
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? பிரதமர் மோடி விளக்கம்!
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? பிரதமர் மோடி விளக்கம்!
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? பிரதமர் மோடி விளக்கம்!

இந்தியாவில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் கொரோனா 3ம் அலைப்பரவலுக்கு மத்தியில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது சாத்தியமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

முழு ஊரடங்கு

நாடு முழுவதும் கொரோனா 3ம் அலைத்தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் வேளையில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்று மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு மாநிலங்கள் தோறும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி முழு முடக்கம் ஆகிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஒவ்வொரு நாளும் கொரோனா நோய் தொற்றின் வேகம் பல மடங்காக அதிகரித்து வரும் சூழலில் மீண்டும் முழு ஊரடங்கு குறித்த அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

தமிழக அரசின் ரேஷன் கார்டு பெற விரும்புவோர் கவனத்திற்கு – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

ஆனால் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் இம்முறை தேசிய அளவில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதாவது, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய ஆலோசனை கூட்டத்தில், கடந்த நோய் தொற்று அலைகளின் போது மக்களின் வாழ்வாதாரம் பெரிதளவு பாதிப்படைந்ததால் இம்முறை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் எண்ணம் இல்லையென்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தடுப்பூசிகள் தான் கொரோனா வைரஸுக்கு எதிரான முக்கிய ஆயுதம் என்றும் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கொரோனா முந்தைய வகைகளை விட ஒமிக்ரான் வைரஸ் தொற்று நாடு முழுவதும் வேகமாக விரிவடைந்து வருவதால், நோய் பரவல் கடுமையாக இருக்கும் பகுதிகளில் உள்ளூர் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். அதே நேரத்தில் வீட்டில் சிகிச்சை பெறுபவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யவும், மாநிலங்களில் உள்ள மருத்துவமனை வசதிகளை பலப்படுத்தவும் பிரதமர் அறிவுறுத்தி இருக்கிறார்.

அதே நேரத்தில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான பிரிவுகளும், லட்சக்கணக்கான ஆக்ஸிஜன் படுக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை ஒரே நாளில் 27 சதவீதம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்திற்குள் 2,47,417 பேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் நேர்மறை விகிதம் 13.11 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 380 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!