மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – பரிசோதனைக்காக காத்திருக்கும் பொது மக்கள்!

0
மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் - பரிசோதனைக்காக காத்திருக்கும் பொது மக்கள்!
மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் - பரிசோதனைக்காக காத்திருக்கும் பொது மக்கள்!
மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – பரிசோதனைக்காக காத்திருக்கும் பொது மக்கள்!

கொரோனா தொற்று காரணமாக சீனாவின் ஷாங்காய் நகரில் விதிக்கப்பட்டிருக்கும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பொது மக்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கிறது.

முழு ஊரடங்கு

கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பல்வேறு வகையாக உருமாறி புதிய பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொற்றை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்த சீனாவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது புதிய வைரஸ் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதாவது, ஒமிக்ரான் வைரஸ் மற்றும் அதன் சமீபத்திய மாறுபாடு காரணமாக சீனாவில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் பெரும் அளவிலான சீன நகரங்கள் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்குள் வைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – 13 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை!

அந்த வகையில் தொழில் நகரம் என்று அழைக்கப்படும் சீனாவின் ஷாங்காய் நரகத்தில் ஒமிக்ரான் வைரஸின் பாதிப்பு கட்டுக்கடங்காமல் பரவிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக சீனாவில் பதிவு செய்யப்படும் ஒட்டு மொத்த பாதிப்பில் 3 பங்கு ஷாங்காய் நரகத்தில் மட்டுமே பதிவு செய்யப்படுகிறது. இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர கடந்த ஒரு சில வாரங்களாக ஷாங்காய் நகரம் முழுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் ஷாங்காய் நகத்தை சேர்ந்த மக்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நீண்ட வரிசையில் காத்து நிற்கும் நிற்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்த வீடியோவில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கொரோனா பரிசோதனைக்காக பொது மக்கள் வரிசையில் நின்றபடி காத்திருக்கின்றனர். இதற்கிடையில் ஷாங்காய் நகரில் சுமார் 2 கோடி 20 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் பலரும் அறிகுறியின்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் சீன அரசு, ஒரு நபருக்கு சுமார் 3 முறை என்ற அளவில் தொடர்ச்சியாக கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஷாங்காய் நகர நிர்வாகத்திற்கு வலியுறுத்தி இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!