நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? பிரதமரின் முடிவு என்ன!
நமது நாட்டின் அண்டை நாடான சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, அதனை தொடர்ந்து தற்போது மலேசியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த பிரதமர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முழு ஊரடங்கு:
உலகில் உள்ள சர்வேதேச நாடான சீனாவில் உள்ள முக்கிய நகரான வூகான் பகுதியில், சென்ற 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று மிகவும் மோசமான நிலையில் பரவியது. மேலும் இந்த தொற்று சீனாவில் மட்டுமல்லாமல் இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும் அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருவது பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்தது. இந்த நிலையில் அண்மை நாட்களில் சீனா, இந்தியா ஆகிய பெரு நாடுகளில் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது.
TNPSC முக்கிய அறிவிப்பு 2022 – தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு!
இந்த நிலையில் தற்போது மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,624 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 44,27,067 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா காரணமாக மேலும் 9 பேர் உயிரிழந்து உள்ளனர். நாட்டில் தற்போது வரை இறந்தவர்கள் எண்ணிக்கை 35,491 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 10,041 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 43,10,599 ஆக உயர்ந்துள்ளது என்றும் அந்நாட்டின் மருத்துவத் துறையின் சார்பில் கூறியுள்ளனர்.
அதனை தொடர்ந்து, நாட்டில் தற்போதைய நிலவரப்படி 80,977 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க பிரதமர் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. கொரோனா பரவல் அதிகரிக்கும் பட்சத்தில், ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படக் கூடும் என்றும் கூறிவருகின்றனர்.