மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – கண்காணிப்பில் இருந்த 6000 பேர் விடுவிப்பு!
இந்த வார துவக்கத்தில், 2 வார முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளிக்க முடிவு செய்த சீனாவின் ஷாங்காய் நகர நிர்வாகம் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருந்த 6000 பேரை விடுத்துள்ளது.
ஊரடங்கு தளர்வு
கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க மருத்துவ கண்காணிப்பில் இருந்த சீனாவின் மிகப்பெரிய நகரத்தின் பெரும்பாலான முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு வருகிறது. அதாவது ஒமிக்ரான் வைரஸின் பாதிப்புகளை கவனத்தில் கொண்டு கடந்த 2 வாரங்களாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு ஷாங்காய் நகர நிர்வாகம் ஏப்ரல்.11ம் தேதியன்று முடிவு செய்தது. அந்த வகையில் 25 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தில் சுமார் 6.6 மில்லியன் மக்கள் ஏப்ரல் 12 முதல் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை: ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.392 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
ஆனால் சிலர் தங்கள் சொந்த சுற்றுப்புறங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டனர். மறுபக்கத்தில் ஷாங்காய் நகரத்தின் சுமார் 8000 பகுதிகளில் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் மருத்துவ கண்காணிப்பு வசதிகளிலிருந்த மேலும் 6,000 பேரை ஷாங்காய் நகர நிர்வாகம் விடுவித்திருக்கிறது. இதற்கு முன்னதாக ஷாங்காயில், சீன அரசின் “பூஜ்ஜிய-சகிப்புத்தன்மை” அணுகுமுறையின் கீழ், சில குடியிருப்பாளர்கள் மூன்று வாரங்கள் அல்லது அதற்கும் மேலாக தங்கள் வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாலும் ஓமிக்ரான் மாறுபாட்டின் நிகழ்வுகளில் சமீபத்திய எழுச்சி அச்சுறுத்தி கொண்டு தான் இருக்கிறது.
அதனால், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் எவரும் உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் கண்காட்சி அரங்குகளில் உள்ள கண்காணிப்பு மையங்களில் குறைந்தபட்சம் ஒரு வாரத்தை செலவிட வேண்டும் என்றும் சீன அரசாங்கம் கோருகிறது. இதற்கிடையில் சுகாதார கண்காணிப்பு தொடரும் என்றாலும், கண்காணிப்பு மையங்களை விட்டு வெளியேறி வீடு திரும்ப நேற்று (ஏப்ரல்.12) மட்டும் சுமார் 6,044 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நகரின் சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு – மாதம் ரூ.8000/- உதவித்தொகை
ஷாங்காய் நகரத்தில் புதிதாக கண்டறியப்பட்ட தினசரி வழக்குகளின் எண்ணிக்கை 26,338 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 1,189 பேரைத் தவிர மற்ற அனைத்தும் அறிகுறிகள் இல்லாமல் தொற்று பதிவானவர்கள் தான். இதற்கிடையில் மொத்தம் 2,00,000க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகளுடன் போராடிக்கொண்டிருக்கும் சீனாவில் வெகுஜன பரிசோதனை முறையில் பல அறிகுறியற்ற வழக்குகள் கண்டறியப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஷாங்காய் நகரத்தில் கொரோனா தொடர்பான இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.