ஜூலை 18 முதல் 24 வரை முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
மிசோரம் மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கில் இருந்து 2 வாரங்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை 24 வரை மேலும் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கை நீட்டிப்பதாக ஐஸ்வால் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் சூழலில் மிசோரம் மாநிலத்தில் கடந்த 2 வாரங்களாக முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மிசோரம் மாவட்டத்தில் உள்ள ஐஸ்வால் நகராட்சி பகுதியில் மட்டும் கூடுதலாக ஒரு வார முழு ஊரடங்கை அமல்படுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏனெனில் இந்த நகராட்சி பகுதியில் மட்டும் கொரோனா புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகளவு பதிவு செய்யப்பட்டு வருவதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
யுவா, மீராவை வீட்டை விட்டு வெளியே துரத்தும் அப்பா – ‘கண்ணனா கண்ணே’ ப்ரோமோ!
அந்த வகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளின் கீழ் ஜூலை 18 ஆம் தேதி முதல் ஜூலை 24 ஆம் தேதி நள்ளிரவு வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவித்துள்ளது. மேலும் ‘மிசோரத்தில் கொரோனா வைரஸ் நிலைமையை ஆய்வு செய்த துணை கமிஷனர்கள் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முடிவு செய்யலாம்.
ஐஸ்வால் நகராட்சி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 55 ஆக பதிவு செய்யப்பட்டு வந்த கொரோனா பாதிப்பானது மே மாதத்தில் 202 ஆகவும், கடந்த பதினைந்து நாட்களில் 381 ஆகவும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஊரடங்கு அவசியம்’ என அரசு அளித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த பொது முடக்க காலத்தில்,
- நீர், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் செயல்படும்.
- ஹெல்த்கேர் மற்றும் எல்பிஜி விநியோகம் செயல்படும்.
- அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளைத் தவிர அனைத்து கடைகளும் மூடப்படும்.
- பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும்.
- அனைத்து வகையான பொது, மத, சமுதாய கூட்டங்களும் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.