ஜூன் 20 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!!
ஆந்திர மாநிலத்தில் வருகிற 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் மாநில அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை வருகிற 20ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் காரணமாக கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. மேலும் சில மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவடைந்து வரும் நிலையில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. தற்போது ஆந்திர மாநிலத்தில் வருகிற ஜூன் 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரவுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டை வருகிற ஜூன் மாதம் 20ம் தேதி வரை நீட்டித்து ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கின் புதிய தளர்வுகளின்படி வணிக நிறுவனங்கள், அத்தியாவசிய கடைகளின் நடைபெறும் விற்பனை நேரம் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அரசு நிறுவனங்களும் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் – புகார்களை அனுப்புவது எப்படி?
மருத்துவ சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என்றும் தொழில் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்திற்கும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் மாநில அரசு தெரிவித்துள்ளது. எனவே இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தையும் மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் பொது இடங்களில் முறையாக சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
TNPSC