ஜூன் 30 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் மாவட்டங்களிலும் சில தளர்வுகளுடன் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் தொற்று பாதிப்பு அதிகமுள்ள 7 மாவட்டங்களில் எவ்வித தளர்வுகளும் வழங்கப்படவில்லை.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா பரவல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் பல்வேறு மாநிலங்களில் கடுமையாக கடைபிடிக்கப்பட்டுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா பரவல் இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தவ்பால், சுராச்சந்த்பூர், பிஷ்ணுபூர், உக்ருல் மற்றும் கச்சிங் ஆகிய மாவட்டங்களில் அதிகமாக உள்ளது.
தங்க நகைகளை விற்பனை செய்ய திட்டமிடுபவர்கள் கவனத்திற்கு – நிதி சிக்கல்கள்!
இதனால் அந்த பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதுவரை மாநிலம் முழுவதும் 58,081 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இறப்பு எண்ணிக்கை 925 ஆக உள்ளது. ஏற்கனவே கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 11 வரை நீட்டிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்தாலும் நோய் பரவலை கட்டுப்படுத்த மேலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என மருத்துவ குழுவினர் பரிந்துரை செய்தனர். அதனை தொடர்ந்து நோய் தொற்று அதிகமுள்ள 7 மாவட்டங்களில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் மற்ற 9 மாவட்டங்களில் மாவட்டங்களுக்கு இடையிலான இயக்கங்களுக்கு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் அனைத்தும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.