ஜூன் 10 முதல் 5 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு – கொரோனா பரவல் எதிரொலி!

0
ஜூன் 10 முதல் 5 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு - கொரோனா பரவல் எதிரொலி!
ஜூன் 10 முதல் 5 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு - கொரோனா பரவல் எதிரொலி!
ஜூன் 10 முதல் 5 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு – கொரோனா பரவல் எதிரொலி!

சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் இன்றுடன் (ஜூன் 9) ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவுக்கு வரும் நிலையில் பொதுமுடக்கத்தை மேலும் வருகிற ஜூன் 14ம் தேதி வரை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்:

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு வருகிறது. மேலும் பாதிப்பு குறைந்து வரும் மாநிலங்களில் தளர்வுகள் அடங்கிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. அந்த வகையில் கர்நாடகா மற்றும் ஆந்திர எல்கையில் உள்ள சிக்பள்ளாப்பூர் என்னும் மாவட்டத்தில் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் தற்போது பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக வாகன சோதனை குறைப்பு – காவல்துறை அதிகாரிகள் விளக்கம்!!

இதன் காரணமாக இரு மாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளிகள் தங்களது சொந்த ஊரான சிக்பள்ளாப்பூர் மாவட்டத்திற்கு திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக அங்கு கடந்த சில தினங்களாகவே கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை அங்கு மூன்று கட்டமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் அங்கு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் தற்போது இதனை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது, சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் நகர் புறங்களை விட கிராம புறங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 9ம் தேதியுடன் முடிவுக்கு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் 5 நாட்கள் அதாவது வருகிற 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார். மேலும் இந்த ஊரடங்கின் போது அத்தியாவசிய பொருட்கள் சேவை காலை 6 மணி முதல் 10 மணி வரை இயங்கும் என்று தெரிவித்தார்.

TN Job “FB  Group” Join Now

மருந்து மற்றும் வேளாண் உற்பத்தி தொழிற்சாலைகள் தவிர்த்து மற்ற அனைத்து தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் வாகனங்களில் உரிய காரணம் இன்றி மக்கள் சுற்றி திரிந்தால் அவை பறிமுதல் செய்யப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!