ஜூலை 9ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – அரசின் அதிரடி உத்தரவு!

0
ஜூலை 9ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - அரசின் அதிரடி உத்தரவு!
ஜூலை 9ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - அரசின் அதிரடி உத்தரவு!
ஜூலை 9ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – அரசின் அதிரடி உத்தரவு!

சபா மாநிலத்தில் அமலில் இருந்த கடல் ஊரடங்கு உத்தரவு மேலும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் ஜூலை 9 வரை நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முழு ஊரடங்கு நீட்டிப்பு :

மலேசியாவின் சபா மாநிலத்தில் தற்போது அமலில் இருந்து வரும் கடல் ஊரடங்கு உத்தரவு மேலும் ஜூலை 9 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சபா காவல்துறை ஆணையர் டத்தோ இட்ரிஸ் அப்துல்லா கூறியது , சபாவில் விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு உத்தரவு தவாவ், செம்போர்னா, குனாக், கினாபடங்கன், சண்டகன் மற்றும் பெலூரான் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மூன்று கடல் மைல் தொலைவில் உள்ள பகுதிகளை உள்ளடக்கியது. இந்த கடல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 9 வரை நீட்டிக்கப்பட்டதன் முக்கிய காரணம், சபாவின் கடல் பகுதிகளில் வன்முறைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதுதான்.

Exams Daily Mobile App Download

மேலும் தவாவ், செம்போர்னா, குனாக், கினாபடங்கன், சண்டகன் மற்றும் பெலூரான் உள்ளிட்ட மாவட்டங்களில் வசிப்பவர்கள் ஊரடங்கு காலங்களில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், வெளியில் இருந்து வருபவர்கள் யாரும் ஊரடங்கு உத்தரவு மண்டலங்களுக்குள் நுழைய அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இப்போது கடத்தல் மற்றும் பரிசீலனை குழுக்கள் உட்பட எல்லை தாண்டிய குற்றவாளிகளிடமிருந்து வரும் அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டோக்கன் இருந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் – அரசின் திடீர் அறிவிப்பு!

அந்த வகையில் தெற்கு பிலிப்பைன்ஸை சேர்ந்த பயங்கரவாதிகள் மற்றும் குற்றவாளிகளால் மலேசியாவின் எல்லைகள் அத்துமீறாமல் இருக்க இந்த ஊரடங்கு உத்தரவு ஜூலை 9ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து சபாவில் உள்ள தீவுகளுக்கு செல்லும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் அல்லது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை அரசு தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் கப்பல்களின் இயக்கத்தை கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!