ஜூலை 2 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!
திரிபுரா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து மறுபரிசீலனை செய்த பின்னர், கொரோனா ஊரடங்கு உத்தரவுகளை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தாக்கமானது குறைந்து வந்தாலும், ஒரு சில மாநிலங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திரிபுரா மாவட்டத்தில் உள்ள அகர்தலா மாநகராட்சியின் கீழ் உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. அதனால் அந்த பகுதிகளுக்கு மட்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறைவாக உள்ள மற்ற நான்கு நகராட்சிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசுப் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு – கமிஷனர் சுற்றறிக்கை!
இது தொடர்பாக மாநில அரசு வெளியிட்ட முந்தைய உத்தரவுப்படி, ஜூன் 26 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை 12 நகராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. ஆனால் அகர்தலா முனிசிபல் கார்ப்பரேஷனின் கீழ் உள்ள பகுதிகள் மற்றும் திரிபுராவின் 10 குடிமை அமைப்புகளிலும் ஜூலை 2 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என்று தலைமைச் செயலாளர் குமார் அலோக் உத்தரவிட்டிருந்தார்.
TN Job “FB Group” Join Now
இதற்கிடையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய உத்தரவின்படி, அகர்தலா மாநகராட்சி, ரானிர்பஜர் மாநகராட்சி, ஜிரானியா நகர் பஞ்சாயத்து, உதய்பூர் நகராட்சி மன்றம் உள்ளிட்ட 8 பகுதிகளில் ஜூலை 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கடைகள் மற்றும் சந்தைகள் திறந்திருக்கும். தொடர்ந்து தபாக்கள் மற்றும் உணவகங்கள் பிற்பகல் 2 மணி வரை செயல்படும். மேலும் ஜிம்கள், வணிக வளாகங்கள், சினிமா அரங்குகள், நீச்சல் குளங்கள், அழகு நிலையங்கள் மற்றும் பூங்காக்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.