ஜூலை 1 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
மேற்கு வங்காளம் மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூலை 1 ஆம் தேதி வரை நீடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்ட ஊழியர்களுடன் உணவு விடுதிகள் தினமும் 3 மணி நேரம் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 15 வரை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஜியோ (Jio) சிம் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ரீசார்ஜ் செய்வதற்கு புதிய வழி!!
ஆனால் கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் மூன்றாம் அலை பரவ வாய்ப்புள்ளதால் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூலை 1 வரை நீடிக்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பாதிப்பு அதிகரிக்கும் மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுகின்றன. பாதிப்பு குறையும் மாநிலங்கள் தளர்வுகளை அறிவித்து வருகின்றனர்.
TN Job “FB Group” Join Now
தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு சில கட்டுப்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட்டு, தொழிலாளர்கள் தங்குவதற்கு ஒரு இடத்தை வழங்கினால், கட்டுமான பணிகள் மீண்டும் தொடங்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.