ஜூன் 28க்கு பிறகு சில நாட்கள் முழு ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் தகவல்!
கோவாவில் ஜூன் 28 ஆம் தேதி காலை 7 மணிக்கு முடிவடையவிருந்த மாநில அளவிலான முழு ஊரடங்கு உத்தரவானது மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்று முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா 2 ஆம் அலை எதிரொலியாக கோவாவில் கடந்த மே மாதம் முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இந்த முழு ஊரடங்கு உத்தரவானது வாரந்தோறும் நீட்டிக்கப்பட்டு வந்து, தற்போது ஜூன் 28 ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் முடிவடைய இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் டாக்டர் பிரமோத் சாவந்த் ஊரடங்கு தொடர்பான சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
தமிழக தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூல் – அமைச்சர் எச்சரிக்கை!
அதன் படி முழு ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முறையான ஆலோசனைகளை மேற்கொண்டு, ஏற்ற நேரத்தில் அறிவிக்கப்படும் என்று பதிலளித்தார். இது தவிர கோவா முழுவதும் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், அரசு ஊரடங்கு உத்தரவை ஜூன் 28 வரை ஒரு வார காலத்திற்கு நீட்டித்துள்ளது. மேலும் கொரோனா புதிய வழக்குகள் படிப்படியாக குறைந்து வருவதால் பல மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதே நேரத்தில் இந்தியாவில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸின் பரவலை மாநில அரசு கண்காணித்து வருவதாகவும், அதே நேரத்தில் கோவா எல்லையில் ஒரு தனியார் ஆய்வகத்தை அமைத்து கொரோனா வழக்குகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். அதன் படி கோவாவிற்குள் நுழையும் எந்தவொரு நபர்களும் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.