நாட்டில் முழு ஊரடங்கு மேலும் சில காலம் நீட்டிப்பு? பிரதமர் எடுக்க போகும் முடிவு!

0
நாட்டில் முழு ஊரடங்கு மேலும் சில காலம் நீட்டிப்பு? பிரதமர் எடுக்க போகும் முடிவு!
நாட்டில் முழு ஊரடங்கு மேலும் சில காலம் நீட்டிப்பு? பிரதமர் எடுக்க போகும் முடிவு!
நாட்டில் முழு ஊரடங்கு மேலும் சில காலம் நீட்டிப்பு? பிரதமர் எடுக்க போகும் முடிவு!

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதில் தப்பித்த தீவு நாடான சமோவாவில் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு இப்போது பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளது. இதனை மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

முழு ஊரடங்கு

சீனாவின் வுகான் நகரில் முதன் முதலில் கடந்த 2019ம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, பிரிட்டன், இத்தாலி, அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. ஆனால் இதில் தீவு நாடான சமோவாவில் கொரோனா பாதிப்பு கடந்த இரண்டரை ஆண்டுகளாக கண்டறியப்படவில்லை. ஆனால் இப்போது அதிர்ச்சி அளிக்கும் வகையில் இப்போது இங்கு பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் நாளை (ஏப்ரல் 6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டது. இது போன்று பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டாலும் கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்துடன் மாறுபடுகிறது. மேலும் அமலில் உள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளையுடன் முடிவடைகிறது.

அதனால் முழு ஊரடங்கு மேலும் நீட்டிப்பது குறித்து இன்று அல்லது நாளை பிரதமர் ஃபியமே நவோமி மாதாஃபா சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மேலும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஆலோசனை முடிவில் முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!