ஜூலை 1 முதல் வார இறுதி, இரவு முழு ஊரடங்கு அமல்? மாநில அரசு திட்டம்!
கொரோனா நோய்த்தொற்று பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு ஜூலை 1ம் தேதி முதல் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் ஒடிஷா மாநில அரசு வார இறுதி ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இரவு நேர ஊரடங்கில் சில நேர தளர்வுகளும் அளிக்கப்படலாம்.
ஊரடங்கு தளர்வுகள்:
டெல்டா பிளஸ் கொரோனா மாறுபாடு பரவல் காரணமாக, ஒடிசா மாநில அரசு ஜூலை 1 முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை முழுமையாக திரும்பப் பெற வாய்ப்பில்லை. மாவட்டங்களில் உள்ள அனைத்து அத்தியாவசிய கடைகளையும் திறக்க அரசு அனுமதிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த 15 நாட்களுக்கு இரவு ஊரடங்கு உத்தரவு மற்றும் வார இறுதி முழு ஊரடங்கு தொடரும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச தொகுப்பு – அரசுக்கு வலியுறுத்தல்!
கொரோனா தொற்று நிலவரத்தை கருத்தில் கொண்டு மாவட்டங்கள் வகைப்படுத்தப்பட்டு படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படுகின்றன. இதனால் கொரோனா பாதிப்பு சற்று குறையத் தொடங்கி உள்ளது. தற்போது வெளியான தகவல்களின் படி சுமார் 14 மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு சிறிது நேரம் தளர்தபாலம். அடுத்த 15 நாட்களுக்கு, மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இருக்கும். மேலும், அனைத்து கடைகளும் வணிக நிறுவனங்களும் இரவு 7 மணி வரை தொடர்ந்து செயல்படும். வார இறுதி ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு தொடர வாய்ப்புள்ள்ளது.
எதிர்பார்க்கப்படும் முக்கிய தளர்வுகள்
- கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில், அனைத்து கடைகளும் வணிக நிறுவனங்களும் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்
- இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலாகும்.
- வார இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு.
TN Job “FB Group” Join Now
- கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் அனைத்து கடைகளும் – அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்றவை மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.
- தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற கடைகள் பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்கும்.
Works