தடுப்பூசி போடாதவர்களுக்கு முழு ஊரடங்கு அமல், அபராதம் – அரசு முக்கிய அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் ‘ஓமைக்ரான்’ மிகவும் வீரியம் மிக்கதாக உள்ளது. இதன் காரணமாக பல்வேறு விதிமுறைகளை உலக நாடுகள் அனைத்தும் அறிவித்து வருகின்றன.
முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள்
தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்த நிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து தற்போது வர இருக்கும் கொரோனா நோய் பரவலின் 3-வது அலையை எதிர்கொள்ள பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் ‘ஓமைக்ரான் ‘ மிகவும் வீரியம் மிக்கதாக உள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து வருகின்றன.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகும் தனம் சுஜிதா? ரசிகர்கள் அதிர்ச்சி!
தற்போது ஆஸ்திரியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு இங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது இந்த முழு ஊரடங்கு கடந்த மாதம் 11 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதனை தொடர்ந்து பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதில் குறிப்பாக கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டுமே முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் தடுப்பூசி போட்டவர்களுக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிச.20ம் தேதிக்கு பின்னர் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை பரிந்துரை!
மேலும் தடுப்பூசி செலுத்தி கொள்ள மறுப்பு தெரிவிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அபராதமாக 3,600 யூரோ வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 3 லட்சம் வரை இருக்கும் என்று அறியப்படுகிறது. அத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டும் திரையரங்குகள், அருங்காட்சியகங்கள் ஆகிய இடங்களில் இரவு 11 மணி வரை சென்று வரலாம் என்றும் அறிவித்துள்ளது. இதையடுத்து கொரோனா பரவல் தொற்று பாதிப்பின் அடிப்படையில் ஊரடங்கு விதிமுறைகளை அந்தந்த உள்ளூர் நிர்வாகங்கள் அறிவித்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.