தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? அரசின் முடிவு என்ன!
ஒமைக்ரான் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில், ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து சுகாதாரத்துறை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
ஊரடங்கு:
தமிழகத்தில் இதுவரை மூன்று கொரோனா அலைகள் மக்களை தாக்கியுள்ளது. முதல் அலை கடந்த 2020 மார்ச் மாதம் பரவத் தொடங்கியது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரசு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மக்கள் மீண்டு வர முடியாமல் இருந்த நிலையில் அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த டெல்டா பிளஸ் வைரஸ் வேகமெடுக்க தொடங்கியது. இந்த வைரஸ் எதிர்பாராத அளவு பாதிப்புகளை அதிகப்படுத்தியது.
தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.50,000/-
இதனால் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மேலும் வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கியது. 15 வயது முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் மூன்றாம் அலை பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கியது. ஆனால் தடுப்பூசிகள் ஓரளவு செலுத்தி முடிக்கப்பட்டுள்ளாதால் பாதிப்புகள் பெரிதாக இல்லை. கட்டுப்பாடுகளும், ஊரடங்கும் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு நிலை நோக்கி திரும்பும் நேரத்தில் தற்போது ஐரோப்பிய நாடான பிரிட்டனில் ஒமைக்ரான் தொற்றின் உருமாற்றம் அடைந்த எக்ஸ்.இ வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நகரம் முழுவதும் தீவிரமடையும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் – பொதுமக்கள் அதிருப்தி!
இந்த தொற்று, ஒமைக்ரான் தொற்றை விட, அதி வேகமாகப் பரவக் கூடியது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. பிரிட்டன் நாட்டில் எக்ஸ்.இ தொற்று அசுர வேகத்தில் பரவி வருவதாக தகவல்கள் வெளியை உள்ளது. இந்தியாவில் இத்தொற்று பரவும் பட்சத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கில் கட்டுப்பாடுகளை விதிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.