தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? புதிய வைரஸ் பரவல்! பொதுமக்கள் அச்சம்!
தமிழகத்தில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது குறித்து தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒரு சில தகவலை தெரிவித்து உள்ளார். அதை இந்த தொகுப்பில் முழுமையாக பார்ப்போம்.
மீண்டும் ஊரடங்கு:
தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. அதன் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பொருளாதார சீர்கேடு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் படிப்புகளும் பாழாய் போனது என்றே கூறலாம். ஏன் என்றால் அவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்தப் பட்டது. அதனை தொடர்ந்து சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா பரவல் குறைந்து இருந்த காரணத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வுக்கு அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த ஆண்டு கட்டாயமாக பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தற்போது பொதுத் தேர்வுகளும் நடைபெற்று வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இது தொடர்பாக, கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பரவி வரும் தக்காளி வைரஸ் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு ஒரு சில தகவலை தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது, கேரளாவில் பரவி உள்ள தக்காளி வைரஸ் பற்றி அம்மாநில அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். மேலும் நம் மாநிலத்தில் இந்த வைரஸ் இன்னும் வரவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இவர்களுக்கெல்லாம் கார்டுகள் ரத்து?
அதனை தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், நேற்று முன்தினம் மட்டும் 58 ஆக இருந்த கொரோனா தினசரி பாதிப்பு, நேற்று 89 ஆக உயர்ந்துள்ளது. அதை தொடர்ந்து சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்பு இருப்பதாக அறிவித்து உள்ளார்.