தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் ? பொதுமக்களுக்கு விளக்கம் அளித்த அரசு!
தமிழகத்தில் மீண்டும் கொரோனாவின் அலை பரவி வரும் காரணத்தால் மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருமா என்ற வருத்தத்தில் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். அவர்களின் தவிர்ப்பை போக்கும் வண்ணம் தமிழக அரசு கொரோனா அலை குறித்து முக்கிய விளக்கம் அளித்து உள்ளது.
மீண்டும் கொரோனா:
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று மிகவும் பரவி இருந்தது. அதிலும் நமது மாநிலமான தமிழகம் இந்த கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டது. மேலும் கொரோனா பரவல் காரணமாக மாநிலங்களில் பெரிதும் பொருளாதார சீர்கேடு ஏற்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் நேரடி வகுப்புகள் இல்லாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த காரணத்தால் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன் மூலம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டு 10, 11,12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகளும் நடைபெற உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – ஜூலை மாதம் DA அதிகரிக்க வாய்ப்பு!
இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனாவின் அலை துவங்கி உள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வருமா என்று பொது மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த கேள்விகளுக்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றை அளித்து உள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதை இந்த தொகுப்பில் முழுமையாக பார்ப்போம்.
Exams Daily Mobile App Download
அவர் கூறியதாவது, 27 மாவட்டங்களில் கொரோனா தொற்று இல்லை. 9 மாவட்டங்களில் பரவலாக உள்ளது. 1.48 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. உடனடியாக மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு கவலைப்பட வேண்டிய கட்டத்தில் இல்லை. அக்கறை காட்ட வேண்டிய இடத்தில் இருக்கிறோம். அதனை தொடர்ந்து, தர்மபுரி, ராணிப்பேட்டை, மதுரை, திருப்பத்தூர், நாமக்கல், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் விகிதம் குறைவாக உள்ளது. மேலும் மாநிலத்தில் 1,000 பேரில் 3 பேருக்கு மட்டுமே தொற்று பதிவாகிறது. மேலும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டும் தான் தற்போது வல்லுநர்கள் கருத்தாக உள்ளது. ஊரடங்கு அமல்படுத்துவதற்கும், கட்டுப்பாடுகளை தீவிர படுத்துவதற்கான சூழ்நிலை தற்போது இல்லை. மருத்துவமனைகளில் மின்வெட்டு பிரச்சனை இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவமனைகளிலும் ஜெனரேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது என்றும் தெரிவித்து உள்ளனர்.