தலைநகரில் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – வன்முறை எதிரொலி! அரசு அதிரடி நடவடிக்கை!
ஜார்க்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியின் பல பகுதிகளில் நேற்று (ஜூன் 10) நடைபெற்ற கல் வீச்சு சம்பவங்களை அடுத்து இந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால் அப்பகுதிகளில் தற்போது முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு
நபிகள் நாயகத்தின் மீதான கருத்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்களை தூண்டியுள்ள நிலையில் தலைநகர் ராஞ்சியின் பல பகுதிகளில் நேற்று (ஜூன் 10) போராட்டங்கள் வெடித்துள்ளது. அதாவது பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா வெளியிட்ட கருத்துக்களை எதிர்த்து, ராஞ்சியின் சில பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் இரண்டு பேர் உயிரிழந்தனர். அந்த வகையில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நீடித்த இந்த வன்முறைக்கு மத்தியில் ராஞ்சியின் பல பகுதிகளில் தற்போது முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 13 ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
இதற்கு முன்னதாக நபிகள் நாயகத்தை குறித்து வெளியிட்ட கருத்தை எதிர்த்த ஆயிரக்கணக்கான மக்கள் ராஞ்சியில் உள்ள பிரதான சாலையில் ஒன்று கூடி பாஜக தலைவர்களான நூபுர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரைக் கைது செய்ய கோரி போராட்டம் நடத்தினார்கள். மேலும் அந்நகரில் வியாபாரம் நடத்தும் முஸ்லிம்கள் தங்கள் கடைகளை அடைத்தனர். இதனால் நகரின் முக்கிய சந்தை வெள்ளிக்கிழமை காலை முதல் மூடப்பட்டது. இந்த போராட்டத்தை தடுக்கும் விதமாக போலீசார் நடவடிக்கையில் ஈடுபட, போராட்டக்காரர்கள் கற்களை வீசி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தினர்.
Exams Daily Mobile App Download
இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்ட ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பொது மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், இந்த வன்முறை தொடர்பாக பீதி அடைய தேவையில்லை என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, ‘இந்த கவலைக்கிடமான சம்பவம் குறித்து எனக்கு தகவல் கிடைத்தது. ஜார்கண்ட் மக்கள் எப்போதும் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும், சகிப்புத்தன்மையுடனும் இருக்கிறார்கள். எனவே பொது மக்கள் பீதியடையத் தேவையில்லை. இதுபோன்ற குற்றங்களுக்கு வழிவகுக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் பங்கேற்பதைத் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.