இன்று முதல் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – ஒமிக்ரான் பரவல் எதிரொலி!
சீனாவின் பெய்ஜிங் நகரில் தற்போது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதால், ஒமிக்ரான் புதிய பாதிப்புகளை கவனத்தில் கொண்டு சுமார் 3.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பைஸ் நகரத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமல்
சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்த 2019ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுநோய் தற்போது உலக நாடுகளை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் பல்வேறு உருமாறிய வைரஸ்களாக பாதிப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கும் ஒமிக்ரான் வைரஸ் தொற்றின் நிமித்தம் சீனாவில் மீண்டுமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, வியட்நாமின் எல்லைக்கு அருகில், சுமார் 3.5 மில்லியன் மக்கள் வசிக்கும் சீனாவின் பைஸ் நகரம் கடந்த மூன்று நாட்களில் 70க்கும் மேற்பட்ட கொரோனா பதிப்புகளை பதிவு செய்துள்ளது.
TCS நிறுவனத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இதனால் அந்நகரத்தில் இன்று (பிப்.7) முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் சீனாவின் பெய்ஜிங் நகரில் தற்போது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு கையாண்டுள்ளது. அந்த வகையில் சீனாவின் தெற்கு குவாங்சி பிராந்தியத்தில் உள்ள பைஸ் நகர மக்கள் யாவரும் நகரத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் பைஸ் நகரம் முழுவதும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்படும் என்று துணை மேயர் கு ஜுன்யன் தெரிவித்திருக்கிறார்.
தமிழக மின் நுகர்வோருக்கு சூப்பர் அறிவிப்பு – இனி செயலி மூலம் மின் கணக்கீடு!
அதாவது, வாகனங்கள் மற்றும் மக்கள் நகரத்திற்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ முடியாது. அதே நேரத்தில் பணியாளர்களுக்கும், மக்கள் தேவையில்லாமல் நடமாடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனுடன் பைஸ் நகர குடியிருப்பாளர்களுக்கு பெரியளவில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இப்போது டெல்டா மற்றும் ஒமிக்ரான் வைரஸின் பாதிப்புகளை கவனத்தில் கொண்டு, ஒலிம்பிக்கிற்கு முன்னதாக பல்வேறு சீன நகரங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.