இன்று முதல் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு – தீவிரமடையும் கொரோனா பாதிப்பு!
மாநிலம் முழுவதும் புதிய கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்து வருவதையடுத்து கேரளாவில் இன்றும், நாளையும் (ஜூலை 31, ஆகஸ்ட் 1) வார இறுதி முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.
முழு ஊரடங்கு
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வரும் சூழலில், கேரள மாநிலத்தில் மட்டும் புதிய பாதிப்புகள் தொடர்ந்து பெருகிக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தினசரி 22 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பாதிப்பானது நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்டு வரும் மொத்த பாதிப்பில் பெரும் பங்களிப்பை அளிப்பதாக சுகாதார அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20,772 புதிய பாதிப்புகளுடன், 116 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அனுமதி!
அந்த வகையில் நேர்மறை விகிதம் 13.61% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரள மாநிலம் முழுவதும் வார இறுதியில் அதாவது ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 உள்ளிட்ட நாட்களில் முழுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க முதல் பினராயி விஜயன் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள புதிய பாதிப்பு கொரோனா மூன்றாவது அலைக்கான அச்சுறுத்தலாக இருப்பதால், மத்திய அரசின் குழுவும் கேரளாவுக்கு விரைந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் டாக்டர் எஸ்.கே.சிங் கூறுகையில், கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா நேர்மறை விகிதம் கவலையை அதிகரித்துள்ளது. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் புதிய வழக்குகள் குறைந்து வருகின்றன. கேரளாவில் இந்த நோய் பரவலை தடுக்க மாநில அரசுடன் விவாதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கிடையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 18 முதல் 20 ஆம் தேதி வரை கேரளாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்ததாக கூறப்படுகிறது.