ஆகஸ்ட் 6 முதல் 20 வரை இரவு நேர ஊரடங்கு நீட்டிப்பு – பிலிப்பைன்ஸ் அரசு உத்தரவு!
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் கொரோனா தொற்றின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது.
இரவு ஊரடங்கு நீட்டிப்பு:
பிலிப்பைன்ஸில் கோவிட் -19 தொற்று பாதிப்பு வெள்ளிக்கிழமை முதல் திங்கள் வரை உள்ள நிலவரப்படி ஒரு நாளைக்கு 8,000 ஐத் தாண்டி உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மட்டும் 8,735 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த மே 28ம் தேதிக்கு பிறகு பதிவான பாதிப்பில் இது அதிகமாக உள்ளது. அங்கு உருமாறிய டெல்டா வகை தொற்று 200 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் இன்னும் 17 பேருக்கு பாதிப்பு உள்ளது என்று பிலிப்பைன்ஸ் சுகாதார துணைச் செயலாளர் மரியா ரோசாரியோ வெர்ஜெய்ர் கூறியுள்ளார்.
Tokyo Olympics Day 10, India Schedule List on August 03 – முழு விபரம் இதோ!
மாநிலத்தின் தலைநகரான மணிலாவில் 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் அங்கு நோய் தடுப்பு நடவடிக்கையாக ஆகஸ்ட் 6 முதல் 20 வரை இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படுவதாக ஜனாதிபதி செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். முன்னதாக இரவு 10 மணி முதல் ஆறு மணி நேரத்திற்கு இருந்த ஊரடங்கு தற்போது இரவு 8 மணி முதல் நீடிக்கப்படுவதாக நிர்வாகக் குழுவின் தலைவர் பெஞ்சமின் அபலோஸ் அறிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும், ”எங்கள் மருத்துவமனைகளில் தொற்று பாதிப்பு காரணமாக முழு அளவிற்கு நோயாளிகள் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பதால், கொரோனா வைரஸின் பரவலை இன்னும் தடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். மணிலாவில் சோதனைச் சாவடிகளுக்கு அதிகாரிகள் காவல்துறையினரை நியமித்து, மாவட்டத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பயணம் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.