இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு? பிரதமரின் முக்கிய தகவல்!
இந்தியாவில் கொரோனா பேரலையின் தாக்கம் தற்போது பல்வேறு மாநிலங்களில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பிரதமர் அனைத்து மாநில முதல்வர்களுடன் நேற்று வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இதில் பிரதமர் பேசியதை பற்றி விரிவாக பார்ப்போம்.
முழு ஊரடங்கு
இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் 31ம் தேதி அன்று அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பேரலையின் 4ம் அலை ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி தற்போது பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அத்துடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – எச்சரிக்கை பதிவு! தவறாமல் படிங்க!
மேலும் இந்தியாவில் தற்போது தலைநகர் டெல்லி, தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் தலைநகர் டெல்லி, தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் முகக்கவசம் அணியாவிட்டால் அபராத தொகையும் வசூலிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனை மேற்கொண்டார்.
Exams Daily Mobile App Download
இதில் பிரதமர் மோடி அவர்கள் பேசியதாவது, இந்தியாவை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது கொரோனா நெருக்கடி நிலையை சிறப்பாக கையாண்டு வருகிறது. தற்போது பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அத்துடன் நாட்டில் மருத்துவ உட்கட்டமைப்பை அதிகரிப்பதில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். இதுவரை இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 96 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 85 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று பெருமையாக கூறியுள்ளார். மேலும் கொரோனா பரவல் அதிகரிக்கும் சமயத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.