இன்று முதல் முழு ஊரடங்கு தளர்வுகள் அமல் – எவற்றுக்கெல்லாம் அனுமதி!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் 25 மாவட்டங்களில் தளர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சில கூடுதல் செயல்பாடுகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்
கொரோனா நேர்மறை விகிதம் குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக மஹாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. தவிர புதிய வழிகாட்டுதல்களையும் அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. இந்த தளர்வுகள் இன்று (ஆகஸ்ட் 3) காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக மாநிலம் முழுவதும் கொரோனா புதிய பாதிப்புகளை கவனத்தில் கொண்ட அரசு, 25 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த முடிவு செய்துள்ளது. இந்த தளர்வுகளில் கடைகளின் தற்போதைய வணிக நேரங்களை நீட்டித்து வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – பயணிகள் கவனத்திற்கு!
இதனிடையே மும்பை மற்றும் தானே மாவட்டங்களில் உள்ள பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் முழு ஊரடங்கு குறித்த கட்டுப்பாடுகளை முடிவு செய்யுமாறு மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அந்த வகையில் நிலை 3 இல் உள்ள கோலாப்பூர், சாங்லி, சதாரா, புனே, ரத்னகிரி, சிந்துதுர்க், சோலாப்பூர், அகமது நகர், பீட், ராய்காட் மற்றும் பால்கர் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் தொடரும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இவை தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும், தற்போதுள்ள கட்டுப்பாடுகள் திருத்தப்பட்டுள்ளன.
மேலும் பொது இடங்களில் மக்கள் அனைவரும் முகக்கவசங்கள், சமூக இடைவெளி உள்ளிட்ட அனைத்து கொரோனா தடுப்பு நெறிமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க தவறினால், பேரிடர் மேலாண்மைச் சட்டம் – 2005, தொற்றுநோய் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 1860 மற்றும் அதன் கீழ் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் காலத்தில் சில கூடுதல் செயல்பாடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
- அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற கடைகள், ஷாப்பிங் மால்கள் உட்பட அனைத்தும் வார நாட்களில் இரவு 8 மணி வரையும், சனிக்கிழமைகளில் மாலை 3 மணி வரை திறந்திருக்கும்.
- அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படும்.
- உடற்பயிற்சி, நடைபயிற்சி, ஜாகிங் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் ஆகிய நோக்கங்களுக்காக அனைத்து பொது தோட்டங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் திறந்திருக்கும்.
- அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் முழுத்திறனுடன் செயல்பட முடியும்.
- பயணத்தின் போது கூட்டத்தைத் தவிர்க்க வேலை நேரங்களை மாற்றியமைக்க வைக்க வேண்டும்.
- அலுவலகங்கள் WFH முறையை தொடர்ந்து மேற்கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
- அனைத்து விவசாய நடவடிக்கைகள், குடிமைப் பணிகள், தொழில்துறை செயல்பாடு, பொருட்களின் போக்குவரத்து ஆகியவை மேற்கொள்ளப்படும்.
- உடற்பயிற்சி கூடங்கள், யோகா மையங்கள், சலூன்கள், அழகு நிலையங்கள், ஸ்பாக்கள் 50% திறனுடன் வார நாட்களில் காலை 8 மணி வரையும், சனிக்கிழமைகளில் மாலை 3 மணி வரை திறந்திருக்கும்.
- இந்த சேவைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும்.
- வார நாட்களில் மாலை 4 மணி வரை அனைத்து உணவகங்களும் 50 சதவீத இருக்கை திறனுடன் திறந்திருக்கும்.
- பார்சல் சேவைகள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது.
அனுமதி மறுக்கப்பட்டவைகளில்,
- அனைத்து திரையரங்குகள், நாடக அரங்குகள் மற்றும் மல்டிப்ளெக்ஸ் காம்ப்ளெக்ஸ்கள் மறு உத்தரவு வரும் வரை மூடப்படும்.
- மாநிலத்தின் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும்.
- மாநிலக் கல்வித்துறை மற்றும் உயர் மற்றும் தொழில்நுட்பத்துறையின் உத்தரவுகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு பொருந்தும்.
- பொருட்கள் இயக்கத்தின் மீதான கட்டுப்பாடுகள் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொருந்தும்.
- கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக, பிறந்தநாள் கொண்டாட்டங்கள், அரசியல், சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகள், தேர்தல், தேர்தல் பிரச்சாரம், பேரணிகள், கண்டன ஊர்வலங்கள் ஆகியவற்றிற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.