மே 31 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!!

0
மே 31 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு உத்தரவு!!
மே 31 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு உத்தரவு!!
மே 31 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!!

பஞ்சாப் மாநிலத்தில் லூதியானா நகரில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அங்கு தினசரி 17 மணி நேர ஊரடங்கை மே 31ம் தேதி வரை நீடிப்பதாக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

லூதியானாவில் மட்டும் இதுவரை 75,815 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 1,720 பேர் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்திலேயே இது அதிக பதிவாகும். தற்போது லூதியானாவில் 13,217 பேர் சிகிச்சையில் உள்ளனர். 60,858 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் லூதியானா மாவட்டத்தில் மட்டும் மே 10ம் தேதி முதல் தினசரி 17 மணி நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.

ஓட்டுநர் உரிமம் ஆன்லைனில் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இதனால் பாதிப்புகள் 35% குறைந்து உள்ளது. மே 10 மற்றும் 11ம் தேதிகளில் 30 ஆக இருந்த உயிரிழப்புகள் தற்போது குறைந்துள்ளது. இருப்பினும் மாநிலத்தின் பாதிப்பு பட்டியலில் லூதியானா முதலிடத்தில் உள்ளது. இதனால் அங்கு உள்ள 17 மணி நேர தினசரி ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீடிக்க மாநில முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். இதனால் அங்கு மதியம் 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இருப்பினும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பால் விநியோகம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பால் வியாபாரிகளுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இந்த கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படும். வெள்ளி பகல் 12 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை வார இறுதி ஊரடங்கு அமலில் இருக்கும். இதனால் பொது இயக்கம் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!