காய்கறிகள் வாங்குவதற்கு முன் ‘இத’ கவனிங்க – FSSAI வெளியிட்ட முக்கிய வீடியோ!
காய்கறிகளின் தேவை அதிகமாகி வருவதால் கலப்படங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதை கண்டறிய FSSAI வழிமுறைகளை கூறியுள்ளது. இது குறித்த வீடியோ பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது.
கலப்படம்:
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகையின் காரணமாக உணவின் தேவையும் அதிகமாகியுள்ளது. அதனை தொடர்ந்து உணவு பொருட்களில் கலப்படமும் அதிகரித்து வருகிறது. கலப்படம் செய்யப்பட்ட உணவு மற்றும் கலப்படம் செய்யப்படத்தக்க உணவு முதலியானவற்றிற்கான வித்தியாசம் தெரியாமல் மக்கள் குழம்பி வருகின்றனர். அதன் காரணமாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கலப்பட உணவுகளை கண்டறிவது குறித்த வீடியோ ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
TCS நிறுவனத்தில் 10 லட்சம் பேருக்கு வேலை – புதிய நிதியாண்டில் இலக்கு!
பச்சை காய்கறிகளில் மீன்களுக்கு பூஞ்சை தொற்று ஏற்படாமல் இருக்க பயன்படுத்தப்படும் malachite green என்னும் பச்சை சாயம் பூசப்படுகிறது என sciencedirect.com கூறியது அதிர்ச்சியளித்துள்ளது. இந்த வகை சாயமானது தொழிற்சாலைகளிலும் துணிகளிலும் பூச பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாயமானது மீன் வளர்ப்பிற்கு பூஞ்சைகள் ஏற்படாமல் இருக்கவும் பயன்படுத்தப்படும். இதை நமது உணவில் சேர்த்துக் கொண்டால் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இந்த சாயம் கலந்த உணவை உட்கொள்ளும் போது உடலில் பல உறுப்புகள் நேரடியாக பாதிக்கப்பட வைப்பார்கள் உள்ளதாம். மேலும் புற்றுநோய், குரோமோசோமால் எலும்பு முறிவு, டெரடோஜெனெசிட்டி மற்றும் சுவாச நச்சுத்தன்மை முதலியன ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காய்கறியில் கலப்படத்தை கண்டறிய பருத்தி பஞ்சு ஒன்றை எடுத்து அதனை காய்கறியின் மீது தேய்க்க வேண்டும். அந்த பஞ்சில் பச்சை சாயம் ஓட்டினால் அது கலப்படம் என இந்த வீடியோவில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.