FSSAI ஆணையத்தில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்..!
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Food Analyst பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Food Safety and Standards Authority of India (FSSAI) |
பணியின் பெயர் | Food Analyst |
பணியிடங்கள் | 04 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.03.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
FSSAI காலிப்பணியிடம்:
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் Food Analyst பதவிக்கு என மொத்தம் 04 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
FSSAI கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய Chemistry / Biochemistry / Microbiology / Dairy Chemistry / Food Technology / Food and Nutrition போன்ற ஏதேனும் ஒரு பாடத்தில் Master’s degree அல்லது Bachelor of Technology in Dairy / Oil / Veterinary Sciences பாடத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் GATE அல்லது CSIR / ICAR ன் National Eligibility Test தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
FSSAI வயது விவரம்:
இப்பணிக்கு பதிவுதாரர்கள் 10.03.2022ம் தேதியின் படி, கட்டாயம் 50 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும். மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் பார்வையிடலாம்.
FSSAI ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் நபர்கள் மாத ஊதிய தொகையாக ரூ.60, 000 /- பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் தொகை பற்றிய விவரங்களை அறிவிப்பில் பார்க்கலாம்.
FSSAI தேர்வு முறை:
இப்பணிக்கு பதிவுதாரர்கள் தகுதியின் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டவர்கள் மட்டும் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.
FSSAI விண்ணப்பிக்கும் முறை:
தகுதி மற்றும் திறமை வாய்ந்த பதிவுதாரர்கள் கொடுக்கப்பட்ட இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் இப்பணிக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து 10.03.2022க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் 10.03.2022 க்கு பிறகு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இயலாது என்று அறிவித்துள்ளது.