தமிழகத்தில் வங்கிகள் வேலை நேரம் குறைப்பு – இன்று முதல் அமல்!!
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளின் வேலை நேரம் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் காலை 10 மணி முதல் மதியம் 2 மணியாக குறைக்கப்பட்டுள்ளது.
வேலை நேரம் குறைப்பு:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிக அளவில் பரவி உள்ளதால், அரசு தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளிலும் வேலை நேரத்தை குறைப்பது தொடர்பாக தமிழக மாநில வங்கியாளர்கள் குழும பொது மேலாளர் எஸ்.சி.மோகன்தாஸ், உறுப்பினர் வங்கிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தமிழக தனியார் பள்ளிகளில் கட்டண சலுகைகள் – பெற்றோர்கள் ஆர்வம்!!
கொரோனா இரண்டாவது அலையினால் வங்கி ஊழியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக வங்கி வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. வங்கி மண்டல அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள் மற்றும் வங்கி கிளைகள், காலை, 10:00 முதல் பிற்பகல் 2:00 மணி வரை மட்டுமே இன்று முதல் செயல்பட வேண்டும். இந்த வேலை நேரம் ஏப்ரல் 30ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்.
இணை நோயுள்ளவர்கள், கர்ப்பிணிகள், பார்வையற்றவர்கள், மாற்றுத் திறனாளி ஊழியர்கள் போன்றவர்கள் அதிகாரிகளின் அனுமதியுடன் வீட்டில் இருந்து பணி புரியலாம். கூட்டம் அதிகமாக உள்ள வங்கிகளில் போலீஸ் உதவியை நாடலாம். வங்கி ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கொரோனா தடுப்பூசி போடுவதை வங்கிகள் ஊக்கப்படுத்த வேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்