தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்று முதல் விடுமுறை!

0
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இன்று முதல் விடுமுறை!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இன்று முதல் விடுமுறை!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இன்று முதல் விடுமுறை!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதுமானது எனவும், தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வரத் தேவையில்லை எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கல்வித்துறை அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. இதனால் மாணவர்கள் வீடுகளில் இருந்தபடியே ஆன்லைன் முறையில் படித்தனர். மேலும் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைய ஆரம்பித்ததால், கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டன. கடந்த கல்வி ஆண்டுகளில் மாணவர்கள் தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி அடைத்தனர், இருப்பினும் நடப்பு ஆண்டு கட்டாயம் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி அளித்து 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டார். இதன்படி, இன்று பொதுத்தேர்வு தொடங்க உள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – வலுக்கும் கோரிக்கை!

மேலும் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் இன்று (மே 5) தொடங்கி மே 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 9ம் வகுப்புக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு மே 2 முதல் 4ம் தேதி வரை நடத்தப்பட்டது. ஆண்டு இறுதித் தேர்வுக்கான வினாத்தாள்கள் 1 முதல் 5-ம் வகுப்புக்கு பள்ளி அளவிலும், 6 முதல் 9ம் வகுப்புக்கு மாவட்ட அளவிலும் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு தேர்வு நடத்தப்பட வேண்டுமா என்று பெற்றோர் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், தற்போது கத்திரி வெயில் காலம் தொடங்கி விட்டதால், முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும் பெற்றோர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வர தேவையில்லை என்றும் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எனவே 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு திட்டமிட்டபடி நடத்தப்படும். இதற்கிடையில் அமைச்சரின் இந்த அறிவிப்பு சத்துணவு உட்பட பல்வேறு அலுவல் செயல்பாடுகளில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும் மாணவர்கள் வெயில் அதிகம் இருக்கும் பகல் நேரங்களில் வெளியில் நடமாட வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டு உள்ளதாக புகார் எழுந்து உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!