செப்., 6 முதல் கோவையில் சுற்றுலாத் தலங்களில் அனுமதி – மாவட்ட நிர்வாகத்தின் தகவல்!

0
செப்., 6 முதல் கோவையில் சுற்றுலாத் தலங்களில் அனுமதி - மாவட்ட நிர்வாகத்தின் தகவல்!
செப்., 6 முதல் கோவையில் சுற்றுலாத் தலங்களில் அனுமதி - மாவட்ட நிர்வாகத்தின் தகவல்!
செப்., 6 முதல் கோவையில் சுற்றுலாத் தலங்களில் அனுமதி – மாவட்ட நிர்வாகத்தின் தகவல்!

கோவை மாவட்டத்தில் உள்ள கோவை காரமடை வனச்சரகத்துக்கு உட்பட்ட சுற்றுலா தளங்களில் வரும் திங்கள் கிழமை முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளதாக மாவட்ட வன அலுவலர் அறிவித்துள்ளார்.

சுற்றுலா அனுமதி:

தமிழகத்தில் அனேக மாவட்டங்களில் கொரோனா தொற்றின் 2ம் அலையின் பாதிப்பு குறைந்து விட்டது. இதனால் செப்டம்பர் 15ம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ளது. ஆனால் கோவை போன்ற ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூடுதல் கட்டுப்பாடுகளை உத்தரவிட்டுள்ளார். நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

அரசு கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவு காலியிடங்கள் – கலந்தாய்வு அறிவிப்பு!

மற்ற மாவட்டங்களில் சுற்றுலா தலங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் இதுவரை அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் செப்டம்பர் 6ம் தேதியான வரும் திங்கள் கிழமை முதல் கோவை குற்றாலம், பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படுவதாக, மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் தெரிவித்துள்ளார். இது பற்றிய அறிவிப்பை வெளியிடுகையில், கோவை குற்றாலத்துக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிக்கும் நுழைவுக் கட்டணம் செலுத்தும் முன்பு வெப்பநிலைமானியைக் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும்.

TN Job “FB  Group” Join Now

பிற மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் கரோனா தொற்று இல்லை என்பதற்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்று அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். இந்த விதிகளைக் கடைப்பிடித்து சுற்றுலாப் பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். கோவை குற்றாலத்துக்குச் செல்ல விரும்புவோர் https://coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி 5-ம் தேதி முதல் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுல்படி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சூழல் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!