தொழிலாளர் சட்டம் முதல் டெபிட் கார்டுக்கான வசதிகள் வரை – ஜூலை 1 முதல் வரவிருக்கும் மாற்றங்கள்!
ஜூன் 30ம் தேதிக்கு பிறகு நாட்டில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது. இதில் குறிப்பாக ஜூலை 1 முதல் புதிய தொழிலாளர் சட்டம் அமல் மற்றும் டிடிஎஸ் உடன் இணைக்கப்பட்ட வரி விலக்கு விதி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளுக்கான டோக்கனைஷேசன் முறை உள்ளிட்டவையில் மாற்றங்கள் வர உள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை பார்க்கலாம்.
முக்கிய மாற்றங்கள்
இம்மாதம் முடிவடைவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. இதையடுத்து ஜூலை 1ம் தேதி முதல் அமலாக உள்ள புதிய விதிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம். இதில் முதலாவதாக புதிய தொழிலாளர் சட்டம் நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் மூலமாக ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ஊழியர்களின் ஓய்வூதிய தொகையில் உயர்வு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. அத்துடன் ஊழியர்களின் சம்பளம் அதிகரித்தால் அகவிலைப்படியில் உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
Exams Daily Mobile App Download
அத்துடன் 23 மாநிலங்களில் இத்திட்டத்திற்கான வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் 7 மாநிலங்களில் இத்திட்டம் குறித்த வரைமுறை வகுக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளுக்கான டோக்கனைஷேசன் முறையில் ஜூலை 1 முதல் புதிய மாற்றங்கள் வரும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இவை செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றத்தின் மூலமாக இணையதளத்தின் வாயிலாக வாடிக்கையாளர்கள் தங்களின் கார்டு டேட்டாக்களை சேமித்து வைக்க முடியாது.
சென்னையில் 11 மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா உறுதி – பொதுமக்கள் அதிர்ச்சி!
அதனால் இது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பாதுகாப்பை அளிக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்ததாக டிடிஎஸ் உடன் இணைக்கப்பட்ட வரி விலக்கு விதி ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. அதனால் ஜூலை 1ம் தேதி முதல் உங்களுக்கு ஒரு வருடத்தில் ரூ.20,000 அல்லது அதற்கு மேல் லாபம் கிடைக்கும் பொழுது 10% டிடிஎஸ் செலுத்த வேண்டும். அத்துடன் மருத்துவர்களுக்கு மருந்து நிறுவனங்கள் தரும் இலவச பொருட்கள், இலவச மாத்திரைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவைகளுக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.