ஜூலை 12 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – டெல்லி அரசு அறிவிப்பு!
டெல்லியில் கொரோனா முழு ஊரடங்கு தளர்வுகளின் ஏழாவது கட்டமாக, பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி கூடங்களையும் திறக்க அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஆனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வழியாக கற்பித்தல் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் பரவல் தடுப்பு நடவடிக்கைளில் இருந்து தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் டெல்லியில் புதிய கொரோனா பாதிப்புகள் அதிகமாக பதிவு செய்யப்பட்டு வாராத பட்சத்தில் 7 ஆவது தளர்வுகளின் ஒரு பகுதியாக ஜூலை 12 ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களையும் மீண்டுமாக திறக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு அறிவித்துள்ளது.
Jio, Airtel, VI தினசரி 1.5 GB முதல் 2 GB வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் – முழு விபரம் இதோ!
இருப்பினும், மாணவர்கள் அனைவரும் கல்வி நிறுவனங்களுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை எனவும், ஆன்லைன் வகுப்புகளுக்காகவும், மாணவர் சேர்க்கை உள்ளிட்ட நிர்வாகப்பணிகளுக்காகவும் ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது. தவிர பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள ஆடிட்டோரியங்கள், அரங்குகள் 50% த்துடன் மீண்டும் திறக்கப்படலாம் என அரசாங்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர டெல்லியில்,
இன்று மாலை 6 மணிக்கு ‘வலிமை அப்டேட்’ – நடிகர் அஜித் ரசிகர்கள் உற்சாகம்!
- காவல்துறை மற்றும் ராணுவ வீரர்களுக்கான பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.
- பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் உள்ள ஆடிட்டோரியங்கள், அரங்குகள் அனைத்தும் 50% ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்காக திறக்கப்படலாம்
- மற்றபடி அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்த அனுமதிக்கப்படும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் சினிமா அரங்குகள், மல்டிபிளெக்ஸ், ஸ்பாக்கள், தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், அரசியல், சமூக, கலாச்சார விழாக்கள் மற்றும் பிற கூட்டங்கள் ஆகியவை தடை செய்யப்பட்டிருக்கும்.
- இக்கட்டுப்பாடுகள் ஜூலை 26 அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும்.
- தவிர டெல்லி மெட்ரோ உள்ளிட்ட பொது போக்குவரத்து 50 % இருக்கை வசதியுடன் தொடர்ந்து இயங்கும்.
- மற்ற பேருந்துகளும் 50% இருக்கை வசதியுடன் இயங்கும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.